இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல்..விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படுமா?
Agriculture Budget to be presented today Will farm loans be waived
2025-26-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் இன்று சனிக்கிழமை தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது.இந்த வேளாண் பட்ஜெட்டை வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.
தமிழக சட்டசபையில் நேற்று 2025-26-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.அப்போது அவர் சுமார் 2 மணி நேரம் 40 நிமிடங்கள் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார்.
இந்த நிலையில், 2025-26-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் இன்று சனிக்கிழமை தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த வேளாண் பட்ஜெட்டை காலை 9.30 மணிக்கு வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்வார். அப்போது சுமார் 1½ மணி நேரம் அவர் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தி.மு.க. அரசு முக ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் வேளாண்மைதுறைக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருவது என்பது குறிப்பிடத்தக்கது., 5-வது முறையாக இந்த வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய இருக்கிறார். மேலும் இந்த பட்ஜெட்டில் வங்கிகளில் வேளாண்மைக்காக வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படுமா? என்று விவசாயிகள் காத்திருக்கிறார்கள்.
இந்த சட்டசபை கூட்டத் தொடரில் 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதமும், துறை சார்ந்த இரு அமைச்சர்களின் பதில் உரையும் இடம்பெறும். 17-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 30-ந் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து, 24-ந் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Agriculture Budget to be presented today Will farm loans be waived