பொள்ளாச்சியில் திடீரென தீ பிடித்து எரிந்த ஆம்புலன்ஸ்!! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இறந்த பிணங்களை ஏறிவூட்டும் மின் மயானம் செயல்பட்டு வருகிறது. மயானத்திற்கு பிணங்களை ஏற்றி வரும் ஆம்புலன்ஸ் நேற்று வழக்கமாக பிணங்களை ஏற்றி வந்து அருகில் வழக்கமாக நிற்கும் இடத்தில் நின்று கொண்டிருந்த நிலையில் இன்று திடீரென தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

மாக்கினாம் பட்டியை சேர்ந்த பாபு என்பவர் கொடுத்த தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் எரிந்து கொண்டிருந்த ஆம்புலன்ஸ் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருந்த போதிலும் ஆம்புலன்ஸ்சின் முன் பகுதி முழுவதுமாக எரிந்து சேதமானது. இந்த சம்பவம் அப்பகுதியில் மக்களிடையே பேரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுத்தொடர்பாக பொள்ளாச்சி போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ambulance suddenly caught fire in Pollachi


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->