ஓபிஎஸ்-இபிஎஸ் மீண்டும் இணைவு! அமமுக தனித்து போட்டி! டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ பன்னீர்செல்வம் தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் இணைந்து இணைந்து செயல்பட்டு வருகிறார்.

மேலும் அதிமுகவை மீட்கும் வகையில் புரட்சி பயணத்தையும் தொடங்கியுள்ளார். இதற்கிடையே வெளியான ஒரு தகவலின் படி, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி உடன் இணைந்து விடுவார் என்று பரபரப்பாக சொல்லப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதற்கு உண்டான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும் புதிதாக ஒரு கூட்டணியை தமிழகத்தில் ஏற்படுத்துவதற்கும் டிடிவி தினகரன் முயற்சி செய்து வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இன்று தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் இது குறித்து தெரிவிக்கையில், "ஒருவேளை தேர்தல் நேரத்தில் ஓ பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி கூட்டணிக்கு சென்றால், நட்பு ரீதியாக நீங்கள் அங்கு இருங்கள், நாங்கள் தனித்து போட்டியிடுகிறோம்" என்று கூறி விடுவேன் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AMMK TTV Dhinakaran say about OPS EPS ADMK ELECTION 2024


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?




Seithipunal
--> -->