அரக்கோணத்தில் பெரும் சோகம்! பூட்டிய வீட்டில் தாய் மகன், மகள் பிணமாக மீட்பு! - Seithipunal
Seithipunal


அரக்கோணம் அருகே அங்கன்வாடி பெண் ஊழியர், அவரின் மகள், மகள் என மூன்று பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அரக்கோணம் அடுத்த கந்திரோடு பகுதியை சேர்ந்தவர் மீனாட்சி. 45 வயதாகும் இவர் வளர்புறத்தில் அங்கன்வாடி ஊழியராக பணியாற்றி வந்துள்ளார்.

இவருக்கு பவித்ரா (25 வயது) என்ற மகளும் யுவனேஷ் (20 வயது) என்ற மகனும் உள்ளனர். மகள் பவித்ரா தனியார் தட்டச்சு மையத்தில் பணி புரிந்து வந்துள்ளார். மகன் யுவனேஷ் தனியார் டயர் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், இன்று அதிகாலை மீனாட்சியின் வீடு பூட்டியே இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அரக்கோணம் காவல் நிலையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது அங்கு மீனாட்சி அவரின் மகன், மகள் மூவரும் தனித்தனியாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனை அடுத்து மூன்று பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார், இது குறித்து வழக்கு பதிவு செய்கிறது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் தற்கொலை தான் செய்து கொண்டார்களா? அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arakkonam mother son daughter mystery death


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->