#BREAKING || ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்கிய கட்டப்பஞ்சாயத்து ரவுடி சீசிங் ராஜா! - Seithipunal
Seithipunal


ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு திட்டம் தீட்டி கொடுத்ததாக, சென்னையில் கட்டப்பஞ்சாயத்து, தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்ட சீசிங் ராஜாவை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

ஆற்காடு சுரேஷின் நெருங்கிய கூட்டாளியான சீசிங் ராஜா, ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு திட்டம் தீட்டி கொடுத்ததாக தகவல் வெளியான நிலையில், சீசிங் ராஜா, ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி, கிருஷ்ணாம்பட்டினம் துறைமுக பகுதியில் பதுங்கி இருப்பதாகவும், சென்னை குன்றத்தூரில் வசிக்கும் குடும்பத்தினருடன், சீசிங் ராஜா செல்போன் வாயிலாக தொடர்பு கொள்கிறாரா என்பது குறித்தும் போலீசார் தரப்பில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

மேலும், சீசிங் ராஜா தனது மனைவிக்கு பணம் அனுப்புவதை கண்டுபிடித்து வங்கி கணக்கை போலீசார் முடக்கியுள்ளனர். 

முன்னதாக இன்று காலை ஒரு பிரபல செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, சென்னையில் பழைய பொருட்கள் (ஸ்கிராப்) பிசினஸை யார் கைப்பற்றுவது என்ற போட்டியில், சம்போ செந்திலுக்கு ஆம்ஸ்ட்ராங் தடையாக இருந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை புறநகர் பகுதிகளில் பல நூறு கோடி ரூபாய்க்கு நடைபெறும் ஸ்கிராப் பிசினஸ் சம்மந்தமான கட்டப்பஞ்சாயத்துகளில் சம்போ செந்திலுடன் தகராறு ஏற்பட்டதாகவும், இந்த கொலையில் சம்போ செந்திலுக்கு தொடர்ப்பு இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

தலைமறைவான சம்போ செந்தில் மற்றும் வெளிநாட்டிற்கு போலி பாஸ்போர்ட் மூலம் சம்போ செந்திலின் மனைவியும் வெளி நாட்டிற்கு தப்பி சென்றுவிட்டதாகவும், அவரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Armstrong Chesing Raja andhra Police


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->