நடுவானில் பதறிய விமான பயணிகள்.! அவசர கால கதவைத் திறந்ததால் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


நடுவானில் பதறிய விமான பயணிகள்.! அவசர கால கதவைத் திறந்ததால் பரபரப்பு.!

நாட்டின் தலைநகரான டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வந்த இண்டிகோ விமானத்தில் பயணி ஒருவர் திடீரென நடுவானில் அவசர கால கதவை திறக்க முயன்றுள்ளார். இதைப்பார்த்து விமானத்தில் இருந்த சக பயணிகள் அச்சமடைந்தனர். 

இது குறித்து தகவல் அறிந்த விமான ஊழியர்கள் விரைந்து வந்து அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர் சம்பவம் குறித்து சென்னை விமான நிலைய போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து விமானம் தரையிறங்கியதும், அங்கு தயார் நிலையில் இருந்த போலீசார் அந்த நபரை தனியாக அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். 

அந்த விசாரணையில், அவர் தமிழகத்தின் செங்கம் பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் என்பதும் அவருடைய பெயர் மணிகண்டன் என்பதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அந்த ராணுவ வீரரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

army man open emergency door in flight at mid way


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->