15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.! ஜோதிடருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை.! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஜோதிடருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் கலங்காபேரி சாலை பகுதியை சேர்ந்தவர் ஜோதிடர் பழனிசாமி (63). இவர் 15 வயதுடைய சிறுமிக்கு கடந்த 2020ஆம் ஆண்டு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு பழனிசாமியை கோக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதையடுத்து இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பழனிச்சாமிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 12 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூபாய் 10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Astrologer sentenced to 20 years in prison for sexually harassing 15 years old girl in virudhunagar


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->