ஆகஸ்ட் 1-ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை.! - Seithipunal
Seithipunal


ஆண்டுதோறும் ஆடி மாதம் பூர நட்சத்திரம் ஆண்டாள் பிறந்த தினம் ஆகும். அன்றைய தினம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவில் வளாகத்தில் நடைபெற்ற தேரோட்டம், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு விமர்சையாக நடைபெற உள்ளது. 

இந்த ஆண்டுக்குரிய ஆடிப்பூரம் வருகின்ற ஆகஸ்ட் 1 ஆம் தேதி வருகிறது. அன்றைய தினம் ஆண்டாள் கோவில் தேரோட்டம் நடைபெற உள்ளது. இதற்கான விழா நிகழ்ச்சிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஆகஸ்ட் 13ஆம் தேதியை வேலை நாட்களாக அறிவித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aug 1 Local Holiday For Virudhunagar District


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->