அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: ரூ.1 லட்சம் ரொக்க பணத்தை வென்ற வீரர்! - Seithipunal
Seithipunal


இன்று உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் ஒரு காளையை அடக்கி 1 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை ஒரு வீரர் வென்றுள்ளார்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 1,100 காளைகளும் மற்றும் 900 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். 

இதில், சிவகங்கை மாவட்டம், ஆவாரங்காட்டைச் சேர்ந்த முத்துக்காளை, ரவிமணிமாறன் பிரதர்ஸ்-ன் காளையை அடக்கினால் ரூ.1 லட்சம் மற்றும் 2 தங்க காசுகள் பரிசு என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த மாட்டை அவனியாபுரத்தை சேர்ந்த மாடுபிடி வீரர் ரஞ்சித் பாய்ந்து பிடித்து அசத்தினார்.

இதனையடுத்து அறிவிக்கப்பட்டபடியே ரூ.1 லட்சம் பரிசுத் தொகை மற்றும் 2 தங்க காசுகள் அவருக்கு அமைச்சர் கையால் வழங்கப்பட்டது.

இந்த அவனியாபுரம் போட்டியில் வெற்றி பெறும் சிறந்த காளைக்கு டிராக்டரும், வீரருக்கு காரும் பரிசாக வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Avaniyapuram jallikattu


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->