குண்டு வெடிப்பு விவகாரம்: தமிழகம் உள்பட 7 மாநிலங்களில் என்ஐஏ திடீர் சோதனை! - Seithipunal
Seithipunal


பெங்களூரு சிறை கைதிகளை பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்தது குறித்து தமிழகம் உள்பட 7 மாநிலங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

பெங்களூரு, ராமேஸ்வரம் உணவகத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த முடிவு செய்து என்ஐஏ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். 

பெங்களூரு சிறை கைதிகளை பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்த வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக சென்னையில் பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

மேலும் சென்னை மண்ணடி, முத்தையால் பேட்டை, பிடாரியார் கோவில் தெரு போன்ற இடங்களில் உள்ள குடியிருப்புகளில் சோதனை நடத்தி வருகின்றனர். 

அதேபோல் ராமநாதபுரம், கீழக்கரை உள்ள பகுதிகளிலும் தேசிய புலனாய்வு முகாமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bomb blast issue NIA raids 7 states


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?




Seithipunal
--> -->