அதிர்ச்சி... வேளச்சேரி ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.! - Seithipunal
Seithipunal


கடந்த சில காலமாகவே பொது இடங்கள், அரசு அலுவலகங்கள், விமான நிலையங்கள் என்று பல்வேறு இடங்களுக்கு மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர் வேளச்சேரி ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக வேளச்சேரி போலீசாருக்கும், ரெயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன் படி போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் வேளச்சேரி ரெயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர். 

சுமார் மூன்று மணி நேரம் மேற்கொண்ட சோதனையில் வெடிகுண்டு வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இருப்பினும் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bomb threat to velachery railway station


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->