பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்த இளைஞர்..போக்சோவில் கைது.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பகுதியை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி ஒருவர் கடந்த 4 மாதத்துக்கு முன்பு திடீரென காணாமல் போனார்.

இதனையடுத்து அந்த மாணவியின் பெற்றோர் பவானிசாகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிரமாக மாணவியை தேடி வந்தனர். இந்த விசாரணையில் பவானிசாகர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரது மகன் லோகேஷ் குமார் என்ற வாலிபர் ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து போலீசார் லோகேஷ் குமார் மற்றும் மாணவியை தேடி வந்தனர். இந்த நிலையில் அவர்கள் இருவரும் இருக்கும் இடம் பற்றிய தகவல் தெரிந்ததும் போலீசார் விரைந்து சென்று மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் திருமணம் செய்த லோகேஷ் குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். பின்னர் அவரை ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Boy cheat and married to school girl


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->