ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: காங்கிரஸ் கட்சியின் முக்கிய புள்ளி கைது! - Seithipunal
Seithipunal


பகுஜன் சமாஜ் கட்சிகள் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் ஐந்தாம் தேதி 8 பேர் கொண்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்டார் 

இந்த படுகொலை சம்பவத்தில் தற்போது வரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் மேலும் மூன்று முக்கிய புள்ளிகளை கைது செய்ய போலீசார் சிபிசிஐடி போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர் 

இந்த வழக்கை பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் ஒரு அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகி கொண்டே இருக்கிறது. கட்டப்பஞ்சாயத்து முன் விரோதம் தொழில் போட்டி என்ற பல்வேறு கோணங்களில் இந்த வழக்கானது நகர்ந்து கொண்டே இருக்கிறது 

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய புள்ளி அஸ்வத்தாமன் என்பவர் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

அஸ்வத்தாமன் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் நிர்வாகியாக இருந்து வருகிறார்.

இவரின் தந்தையும் பிரபல ரவுடியுமான நாகேந்திரன் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வருகிறார். 

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக கருதப்படும் வழக்கறிஞர் அருள் கொடுத்த தகவலின் படி தற்போது அஸ்வத்தாமனை சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BSP Armstrong case Congress ashwathaman arrested


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->