விருதுநகர் || சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடுப்பதற்காக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சேத்தூர் புறக்காவல் நிலைய போலீசார் கணபதி சுந்தரநாச்சியார்புரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அப்பகுதி பேருந்து நிலையம் அருகே இளைஞர் ஒருவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த இளைஞரை கையும் களவுமாக பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் கணபதி சுந்தரநாச்சியார்புரத்தை சேர்ந்த இசக்கிமுத்து(24) என்பதும், கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது.

இதைத்தொடர்ந்து இசக்கிமுத்துவை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 50 கிராம் கஞ்சா மற்றும் 2000 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cannabis seller arrest in virudhunagar


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->