கள் விற்பனைக்கு மறுபரிசலனை! தமிழக அரசு ஆணை பிறப்பித்த உயர்நீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட் மற்றும் ரேஷன் கடைகளில் மது விற்பனையை செய்ய அனுமதி கோரியும், தமிழகத்தில் கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரியும், ஐடி ஊழியர் முரளிதரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.

அவரின் அந்த மனுவில், தமிழகத்தில் ஆளும் திமுக மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் டாஸ்மாக்கிற்கு மதுபானம் சப்ளை செய்யும் மது நிறுவனம் நடத்தி வருவதாகவும், டாஸ்மார்க் நிர்வாகம் சில குறிப்பிட்ட மதுபானங்களை மட்டுமே விற்பனை செய்து வருவதாகவும் முரளிதரன் தனது மனுவில் தெரிவித்து இருந்தார்.

மேலும், டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலான விலைக்கு மது விற்பனை செய்யப்படுவத்க்கவும், தமிழகத்தில் கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி, சில கட்டுப்பாடுகளுடன் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் முரளிதரன் தனது மனுவில் கோரிக்கை வைத்து இருந்தார்.

முரளிதரன் தாக்கல் செய்த இந்த மனு இன்று பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் நீதிபதி குமரேஷ் பாபு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், தமிழகத்தில் கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவது குறித்து ஏன் மறுபரிசலனை செய்யக்கூடாது என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

மேலும் கல் விற்பனை தடை தொடர்பாக வருகின்ற 29ஆம் தேதி தமிழக அரசு பதிலளிக்க பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

இந்த வழக்கில் மற்றொரு முக்கிய விவகாரமான டாஸ்மாக்கில் அதிக விலைக்கு மதுபானம் விற்கப்படுவதாக கூறப்படும் புகார் குறித்தும், தமிழக அரசு விளக்கம் தரக் கூறி நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

மேலும் சூப்பர் மார்க்கெட், ரேஷன் கடைகளில் மது விற்க அனுமதி தருவது அல்லது விற்பனை செய்யலாமா என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு என்றும் நீதிபதிகள் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai HC TASMAC and Kal Case TNGovt


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->