9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - கையும் களவுமாக சிக்கிய ஆசிரியை.! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டம் கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் உடையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சவுந்தர்யா என்பவர் சமூக அறிவியல் ஆசிரியையாக பணியாற்றினார். இவர் அந்த பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் நெருங்கி பழகி வந்தார்.

இந்த நிலையில் ஆசிரியை சவுந்தர்யா அந்த மாணவியை வெளியே அழைத்து சென்று அவருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியாடைந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். 

உடனே மாணவியின் பெற்றோர் சூலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி போலீசார் ஆசிரியை சவுந்தர்யா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். 

தனியார் பள்ளி ஆசிரியை ஒரு பள்ளியில் பயிலும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

school teacher arrested for harassment case in coimbatore


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->