சிறைக்கைதிகளை வீட்டு வேலைக்கு பயன்படுத்தும் முறை - உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு.!
chennai high court cancelled orderly
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு உரிய வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில், சிறை காவலர்களை உயர் அதிகாரிகளின் வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்தும் ஆர்டர்லி முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. ஆர்டர்லி முறை குறித்து எதிர்காலத்தில் புகார் வந்தால் அது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், சிறைத்துறையில் ஆர்டர்லி முறை ஒழிக்கப்பட்டதை போல் காவல்துறையிலும் ஆர்டர்லி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தனர். அத்துடன், இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
English Summary
chennai high court cancelled orderly