விளையாட்டாக தூக்கு மாட்டிய தம்பி.. வேடிக்கை பார்த்த அண்ணன்.. துடிதுடித்து கண்முன்னே முடிந்த கதை.! - Seithipunal
Seithipunal


சென்னை புழல் பகுதியில் சிறுவன் ஒருவன் தூக்கு மாட்டிக் கொள்வதைப் போல விளையாடிய போது உயிரிழந்துள்ளான். 

சென்னை புழல் அருகே அமுதா என்ற பெண்மணி தனது இரு மகன்களுடன் வசித்து வந்துள்ளார். இதில் மூத்த மகனுக்கு 14 வயதும், இளைய மகனுக்கு 13 வயதும் நடந்துள்ளது. நேற்று தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் சிறுவர்கள் இருவரும் விளையாடிக் கொண்டிருந்தனர்.

இளைய மகனான கார்த்திக் வீட்டின் அறைக்குள் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு தூக்கில் தொங்குவதைப் போல நடித்துள்ளார். இதை அவருடைய அண்ணன் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, எப்படி தூக்கு மாற்றுவது என சிறுவன் கார்த்திக் செய்து கொண்டிருந்த பொழுது, தவறுதலாக சேலை கழுத்தில் இருக அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து கார்த்திக்கின் அண்ணன் கத்தி கூச்சலிட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கதவை உடைக்க முயன்றனர். ஆனால், கதவு தாழ்ப்பாள் போட்டிருந்ததால் உடைக்க முடியவில்லை. அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்த நிலையில் போலீஸ் வீட்டிற்கு வருவதற்குள் சிறுவன் மூச்சு திணறி உயிரிழந்து விட்டான்.

அதன் பின் போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். விளையாட்டு விபரீதத்தில் முடிந்து சிறுவன் உயிரிழந்த காரணத்தால் அப்பகுதியில் சோகம் ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai puzhal 13 years child suicide


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->