வீட்டில் தூங்கிய குழந்தை மர்மமான முறையில் சடலமாக மீட்பு - காவல்துறை விசாரணை..! - Seithipunal
Seithipunal


வீட்டிலிருந்த அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியில் வசித்து வருபவர் மகேஸ்வரன் இவருக்கு திருமணமாகி மனைவியும் மூன்று வயது ஆண் குழந்தை ஒன்று பிறந்து நான்கு மாதங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

இந்நிலையில் 4 மாத குழந்தையை படுக்க வைத்துவிட்டு கழிவறைக்குச் சென்று பார்த்த போது குழந்தையை காணவில்லை, இதனால், அதிர்ச்சி அடைந்த அவர்களுக்குப்  அக்கம்பக்கதில் தேடினர்.

அப்போது அருகில் இருந்த ஒரு ஆற்றின் கரையில் குழந்தை சடலமாக இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து உடனடியாக குழந்தை எடுத்து கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

 இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்,  இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 குழந்தையை கடத்தி ஆற்றில் வீசி கொலை செய்தது யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Child Death At Rasipuram


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->