மாடியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கால் தவறி கீழே விழுந்து உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


நான்காவது மாடியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கால் தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் பெசன்ட் சாலையில் வசித்து வருபவர் ராஜு. இவரின் 4 வயது குழந்தை கோபிகாவை நேற்று மாலையில் பச்சையப்பன் தெருவில் இருக்கும் சகோதரி வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். குழந்தை நான்காவது மாடியில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது கம்பியின் மீது ஏறியுள்ளது.

அப்போது, நிலைதடுமாறி கால் தவறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்து இருக்கின்றது. இதனையடுத்து உறவினர்கள் சிறுமி கோபிகாவை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் கோபிகா செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

child was playing on the floor slipped and fell down and died


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->