பெற்றோர்களே கவனம் : கார் ஓட்டி பழக நினைத்து.. 2 சிறுவர்கள் விபத்தில் சிக்கி பலி!! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டம் பரமத்தேர் வேலூர் அருகே கார் ஓட்டி பழகிய இரண்டு சிறுவர்கள் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த பெரிய மருதூர் அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். அவருடைய மகன் சுதர்சனன் (14). அதே பகுதியைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் லோகேஷ் (17) ஆகிய இருவரும் லோகிசின் தந்தையின் ஆம்னி காரை எடுத்து ஓட்ட பழகியுள்ளனர்.

பரமத்தி வேலூர் அடுத்த கபிலர்மலை பகுதியில் சிறுவன் ஓட்டி சென்ற கார் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த மற்றொரு கார் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஆம்னி கார் ஓட்டி வந்த இரண்டு சிறுவர்கள் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளனர். 

காரின் இடர்பாடுகளில் சிக்கியிருந்த சிறுவர்களின் சடலங்களை மீட்டு பிரதிநிதி சோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இது தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறது.

ஆம்னி காரை ஓட்டிச் சென்ற 14 வயது சுந்தரம் உடன் சென்ற 15 வயதான லோகேஷ் இடத்திலேயே உயிர் இருந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

children drive the car accident


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->