பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு கடிதம்: காரணம் இதுதான்!
CM Stalin letter to PM Modi
தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற் படையினரால் கைது செய்யப்பட்டு அவர்களது படகுகளை பறிமுதல் செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால் தமிழ்நாடு மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்படுவது அதிகரித்துக் கொண்டே உள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டில் இலங்கை கடற்படையினர் 243 மீனவர்களை கைது செய்து 37 படகுகளை பறிமுதல் செய்துள்ளனர். கடந்த 28 நாட்களில் மட்டும் 6 சம்பவங்களில் 88 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் 12 மீன்பிடி படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்துவது மற்றும் அவர்களிடம் உள்ள உபகரணங்களை சேதப்படுத்துவது கவலையை அளிக்கிறது.
இது போன்ற செயல்கள் மீனவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதுடன் அவர்களது பொருளாதார பாதிப்புகளையும் அதிகரிக்கிறது. எனவே பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என முதலமைச்சர் கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், இலங்கை வசம் உள்ள 77 மீனவர்கள் மற்றும் அவர்களது 151 படகுகளை உடனடியாக விடுவிக்க தேவையான அனைத்து தூதராக முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.
கடந்த 03.01.2024 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அதிகாரிகளால் சிறை பிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்களையும் 5.12.2023 அன்று குவைத் கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்ட 4 தமிழ்நாடு மீனவர்களையும் விடுவிக்க தூதராக வழிமுறைகளை பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடியை கேட்டுக் கொண்டுள்ளார்.
English Summary
CM Stalin letter to PM Modi