கு. கோணம் || அறை எடுத்து தங்கிய காதல் ஜோடி..!! பதறியடித்து ஓடிய மாணவன்..!! நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மதுக்கூர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியும், மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவரும் கும்பகோணம் மோதிலால் தெருவில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். 

சிறிது நேரத்திலேயே அந்த மாணவன் அறையில் இருந்து ஓடி வந்து அந்த லாட்ஜில் இருந்தவர்களிடம், மாணவிக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளதாகவும், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவி செய்யுங்கள் என்றும் தெரிவித்துள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் அந்த மாணவியை ஆட்டோவில் ஏற்றி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

அங்கு அவர்கள் இருவரையும் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியதன் பேரில், அவர்கள் அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு அந்த மாணவியை பரிசோதனை செய்த போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று தெரிவித்ததுடன், சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் படி அங்கு வந்த போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து, சம்பவம் குறித்து தடய அறிவியல் துறை அதிகாரிகள், அந்த மாணவி தங்கியிருந்த அறையில் சோதனை நடத்தி தடயங்களை சேகரித்தனர். முதற்கட்ட விசாரணையில் இருவரும் கோவிலுக்கு செல்ல திட்டமிட்டிருந்ததும், கும்பகோணத்திற்கு அந்த பெண் வந்த போது மாதவிடாய் ஏற்பட்டதும், குளித்துவிட்டு வேறு உடை மாற்றிக் கொள்வதற்காக அறை எடுத்து தங்கியதும் தெரிய வந்தது. ஆனால், பிரேத பரிசோதனைக்கு பின்னரே அந்த மாணவியின் மரணம் தொடர்பான உண்மை காரணம் வெளிச்சத்திற்கு வரும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

college student died in kumbakonam


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->