வீட்டுக்குள் நுழைந்த கல்லூரி  மாணவியிடம் ஆபாசமாக சைகை...ஊர்க்காவல்படை வீரர் கைது! - Seithipunal
Seithipunal


கல்லூரி மாணவிகளிடம் தவறாக நடந்த ஊர்க்காவல்படை வீரர் கைது செய்யப்பட்டார்.கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு சதாசிவநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட எம்.எஸ்.ராமையா நகரில் கல்லூரி மாணவி ஒருவர் தனது தோழிகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். சம்பவத்தன்று கடந்த 25-ந் தேதி மாணவியின் வீட்டுக்கு நண்பர் ஒருவா் சென்றிருந்தார். அப்போது நண்பர் ஒருவருடன் மாணவி பேசி கொண்டிருந்தார்.

அப்போது இதனை பார்த்த ஒருவர் அவர்களது வீட்டுக்குள் நுழைந்த  மாணவியிடம் ஆபாசமாக சைகை காட்டியுள்ளார் என கூறப்படுகிறது . அப்போது மேலும் மாணவி மற்றும் நண்பரை மிரட்டி ரூ.5 ஆயிரத்தை பறித்து சென்றார் என கூறப்படுகிறது . இதையடுத்து இதுகுறித்து அந்த மாணவியின் தோழிகள் கொடுத்த புகாரின் பேரில் சதாசிவநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

மேலும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து மர்மநபரை தேடி வந்தநிலையில் மாணவியிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறி ஊர்க்காவல்படை வீரரான சுரேஷ் குமார் (வயது 40) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் வீட்டுக்குள் நுழைந்த கல்லூரி  மாணவியிடம் ஆபாசமாக சைகைகாட்டியது இவர்தான் என கண்டுபிடிக்கப்பட்டது ,கல்லூரி மாணவிகளிடம் தவறாக நடந்த ஊர்க்காவல்படை வீரர் கைது செய்யப்பட்டகர்நாடக மாநிலம் பெங்களூரில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

College student stabbed at home Home Guard Arrested


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->