பள்ளத்தில் பாய்ந்த கல்லூரி வேன் - மாணவர்களின் நிலை என்ன? - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் விவசாயம் பயிலும் மாணவ, மாணவிகள் நேற்று இரண்டு மினி வேன்களில் சிறுமலைக்கு களப்பயிற்சிக்காக சென்றுள்ளனர். அங்கு களபயிற்சி முடிந்ததும் தங்களது வேன்களில் ஏறி மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு புறப்பட்டனர்.

அதன் படி இந்த வேன் மலைச்சாலையில் 3-வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென பிரேக் பிடிக்காததால் வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மினி வேனில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்தனர்.

இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். அந்தத் தகவலின் படி போலீசார் விரைந்து வந்து காயமடைந்த மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். 

பின்னர் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள ஆய்வு பயிற்சிக்காக கல்லூரி மாணவர்கள் சென்றபோது வேன் விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

college students van accident in dindukal


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->