அதிர்ச்சி - வரும் 19ஆம் தேதி ஆட்டோக்கள் இயங்குமா?
coming 19th auto drivers strike
தமிழகம் முழுவதும் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்துவது, கால் டாக்சி செயலிகளைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 19-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு ஆட்டோ, கால் டாக்சி ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ளதாவது:-
"ஆட்டோ சங்கங்கள் தமிழக அரசுக்கு வைத்த கோரிக்கையை கட்டண நிர்ணயக்குழு ஏற்றுக் கொண்டு கடந்த 2022-ம் ஆண்டு 1.5 கிலோ மீட்டருக்கு ரூ.50-ம், அடுத்தடுத்த கிலோ மீட்டருக்கு ரூ.25-ம் நிர்ணயிக்கப்பட்டு பரிந்துரை வழங்கியது. ஆனால், ஓலா, ஊபர் செயலி நிறுவனங்கள் சட்டவிரோதமாக 1.8 கிலோ மீட்டருக்கு ரூ.76 வசூலித்து ஆட்டோ பயணிகளை கொள்ளையடிக்கின்றன.

இந்த நிறுவனங்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தி உடனடியாக ஆணையிடவும், அரசே ஒரு ஆட்டோ செயலியை தொடங்கவும் வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 19-ந்தேதி ஆட்டோ சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ள வேலை நிறுத்தத்தை அனைத்து பகுதி மக்களும் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
coming 19th auto drivers strike