நலிவடைந்த தொழில்.. மனைவியுடன் தற்கொலை செய்த நகை வியாபாரி.. கும்பகோணத்தில் நிகழ்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


தொழில் நஷ்டத்தால் கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் மோகன் இவருக்கு திருமணமாகி ஜெயசுதா என்ற மனைவி இருக்கிறார். இவர்கள் இருவரும் நகைத் தொழில் செய்து வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக தொழில் நஷ்டம் ஏற்பட்டதால் தெரிந்தவர்கள் மற்றும் நண்பர்களிடம் கடன் வாங்கி செலவு செய்து வந்துள்ளார்.

ஆனால் கடனை திரும்ப கொடுக்க முடியவில்லை இதனால் அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு மோகனின் வீட்டிற்கு வந்த அவரது நண்பர்கள் இருவரும் நீண்ட நேரம் கதவை தட்டி உள்ளனர். நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த அவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

 விரைந்து வந்த காவல்துறையினர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது மோகன் மற்றும் அவரது மனைவியின் பெயர் சுதா ஆகிய இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவர்களின் உடலை மீட்டு காவல்துறையினர் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

 இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . கணவன் மனைவி இருவரும் ஒரே அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Couple Committed Suicide Near Kumbakonam


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->