கடலூர்: தலைமை ஆசிரியரை அடித்து, உதைத்து அரை நிர்வாணமாக சாலையில் அழைத்து வந்த பொதுமக்கள்! அதிரவைக்கும் பின்னணி! - Seithipunal
Seithipunal


கடலூர் விருத்தாச்சலம் அருகே எருமனூரில் தனியார் பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி என பெற்றோர்கள் குற்றம் சட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விருதாச்சலம் - மங்கலம்பேட்டை சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

தலைமை ஆசிரியரை அரை நிர்வாகமாக சாலையில் அழைத்து வந்த பொதுமக்கள்:

இது குறித்து வெளியான முதல் கட்ட தகவலின் படி, தலைமை ஆசிரியர் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதால், அந்த ஊரை சேர்ந்த மக்களும், இளைஞர்களும், மாணவிகளின் பெற்றோர்களும், பள்ளியில் புகுந்து தலைமை ஆசிரியரை அடித்து, உதைத்து அவரை அரை நிர்வாணமாக சாலையில் இழுத்துச் சென்றனர். 

தகவல் அறிந்து வந்த போலீசார் பொதுமக்களிடமிருந்து தலைமை ஆசிரியரை மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். 

இதற்கிடையே அதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு தரப்பினர், தலைமை ஆசிரியருக்கு ஆதரவாக குரல் எழுப்பியதால், இரண்டு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் காரணமாக சிறிது நேரம் அந்த பகுதிகள் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மீது விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். 

மேலும் வருவாய் துறை அதிகாரிகளும் இது குறித்து விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cuddalore Erumanoor School Head Master


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->