மேட்டூர் அணை வறட்சி எதிரொலி : கேள்விக்குறியாகும் குறுவை சாகுபடியால் விவசாயிகள் வேதனை..!! - Seithipunal
Seithipunal


மேட்டூர் அணையில் இருந்து ஆண்டு தோறும் குறுவை சாகுபடிக்கு 100 டி. எம். சி. யும், சம்பா சாகுபடிக்கு 230 டி. எம். சி. யும் என்று 330 டி. எம். சி. தண்ணீர் தேவையாக இருக்கும். மேட்டூர் அணை ஒவ்வொரு ஆண்டும் டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக ஜூன் மாதம் 12ம் தேதி திறந்து விடப்படும். 

கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு கர்நாடக  மாநிலம் காவிரியில் தண்ணீர் திறந்து விடாததால் , மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாமல் வறட்சி நிலவுகிறது. இதனால் டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கு உரிய தேதியான ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து விடப்படவில்லை. 

தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் 43.64 அடியாக உள்ளது. மேலும் நீர் இருப்பு 14.04 டி. எம். சி. உள்ளது. இந்நிலையில் மேட்டூர் அணையின் நீர் இருப்பு குடிநீர் பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற நிலையில் உள்ளதால், பாசனத்திற்கான நீர் எப்போது திறந்து விடப்படும் என்று கவலை விவசாயிகளுக்கு எழுந்துள்ளது. 

தென்மேற்கு பருவமழையை நம்பியே இப்போது டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை சாகுபடிக்காக காத்துள்ளனர். கர்நாடக அணைகளிலும் நீர் இருப்பு குடிநீருக்கு மட்டுமே உள்ளது என்று அம்மாநில அரசு கைவிரித்து விட்டது. எனவே ஆழ்துளை கிணறு, மோட்டார் வசதியுள்ள விவசாயிகள் மட்டும் குறுவை சாகுபடிக்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delta Farmers Distressed Due to Mettur Dam Drought


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->