சாமி தரிசனம் செய்ய வந்த நபருக்கு நேர்ந்த கொடூரம் - பழனி கோவிலில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு, ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அந்த வகையில், நேற்று விடுமுறை தினம் என்பதால் தமிழ்நாடு மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பழனி முருகன் கோயிலுக்கு வருகை தந்திருந்தனர்.

அவர்களில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வடமதுரை பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் தனது குடும்பத்தினருடன் பழனி முருகன் கோயிலுக்கு வருகை தந்திருந்தார். இதையடுத்து அனைவரும் படிப்பாதை வழியாக கோயிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென முருகனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

இதைப்பார்த்த கோயில் பணியாளர்கள் உடனடியாக அவரை ரோப் கார் மூலமாக மலை உச்சியில் இருந்து அடிவாரத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர், முருகன் திருக்கோயில் ஆம்புலன்ஸ் மூலம் பழனி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முருகனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்தச் சம்பவம் சிறிது நேரம் பேரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

devotees died in palani temple


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->