கோவில் உண்டியலில் ''ரூ. 90 கோடி''க்கான காசோலை... அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்.! உண்மை என்ன? - Seithipunal
Seithipunal


தர்மபுரி, பெண்ணாகரம் அடுத்துள்ள பிலியனூர் அக்ரஹாரம் பகுதியில் புகழ்பெற்ற அக்ரகார முனியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அமாவாசை நாட்களில் ஆடுதோறும் வருகின்ற மார்கழி மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமை கோவில் திருவிழா நடைபெறுவது வழக்கம். 

இந்த திருவிழாவிற்கு ஆயிரம் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடனாக ஆடுகள், கோழிகளை வெளியிட்டு பொங்கல் வைத்து வழிபடுவார்கள். 

அந்த வகையில் முனியப்பன் கோவில் பக்தர்கள் காணிக்கையாக வைக்கும் திரிசூலங்கள் உள்ள இடத்தில் அன்னதான உண்டியல் அறநிலையத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியலை மாதத்திற்கு ஒரு முறை பிரித்து காணிக்கை எடுப்பது வழக்கம். 

அதன்படி தர்மபுரி அறநிலையத்துறை சார்பில் அதிகாரிகள் முன்னிலையில் கோவில் உண்டியல் நேற்று திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணும் போது அதில் காசோலை இருந்தது. அந்த காசோலையில் ரூ. 90 கோடியே 42 லட்சத்து 85 ஆயிரத்து 256 ரூபாய் இருந்தது கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். 

உடனடியாக காசோலையை கைப்பற்றிய அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தியதில் மகேந்திரன் என்பவர் சவுத் இந்தியா வங்கிக்கான காசோலையில் போடப்பட்டது தெரியவந்துள்ளது. 

இந்த காசோலைக்கான கணக்கு தர்மபுரி சவுத் இந்தியன் வங்கியில் உள்ளதா எனவும் இருக்கையில் அந்த கணக்கில் பணம் உள்ளதா என்பது குறித்தும் அறநிலையத்துறை அதிகாரிகள் இன்று சவுத் இந்தியன் வங்கியில் விசாரணை நடத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இது உண்மையான காசோலையா அல்லது பரபரப்பை ஏற்படுத்துவதற்காக போடப்பட்ட விரைவில் தெரியவரும் என்று அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dharmapuri Temple bill check 90 crore


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->