அங்கன்வாடியில் அட்டூழியம் செய்த திமுக பிரமுகர் மகன் - வேலூரில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


வேலூர் ஒன்றியச் செயலாளராக இருப்பவர் ஞானம் என்கிற சி.எல்.ஞானசேகரன். இவரது மனைவி அமுதா வேலூர் ஒன்றியக் குழுத்தலைவராக உள்ளாட்சிப் பதவி வகிக்கிறார். திமுகவைச்ச சேர்ந்த இவர்களது மகன் சரண் தனது நண்பர்களுடன் சேர்ந்து வேலூர் அலமேலுமங்காபுரம் அருகே வெங்கடாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் `அங்கன்வாடி’ மையத்திற்குள் புகுந்து மது குடித்து சிகரெட் புகைத்து, பட்டாக் கத்திகளுடன் ரீல்ஸ் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சரணின் தந்தை ஞானசேகரன் பேசியதாவது, “அந்த அங்கன்வாடி மையம் சேதாரமாக உள்ளது. ரூ.4.96 லட்சத்துக்கு டெண்டர் விட்டு கழிவறை வசதியுடன் அங்கன்வாடி மையத்தை கட்டடத்தை புதுப்பிக்கும் வேலையும் தொடங்கப்பட்டிருக்கிறது.

பழைய கட்டடம் என்பதால் தனது மகன் ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளான். சினிமாவிலும், ஷார்ட் ஃபிலிமிலும் அவர் நடிக்கிறார். தன்னை பிரபலப்படுத்திக் கொள்வதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்படித்தான் சின்னச்சின்னதாக ரீல்ஸ் எடுத்து போடுகிறார். இந்த விவகாரத்தை பெரிதாக்க வேண்டாம்” என்று அலட்சியமாக விளக்கம் அளித்துள்ளார். இருப்பினும் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk excuetive son drink and smoking in anganwadi vellore


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->