ஈரோட்டில் மருத்துவர் வீட்டில் 67 சவரன் கொள்ளை.! உதவியாளர் உட்பட 4 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


ஈரோட்டில் மருத்துவர் வீட்டில் 67 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் உதவியாளர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஈரோடு பெருந்துறை சாலை பகுதியில் விஷ்ணு தீபக் என்பவர் வசித்து வருகிறார். இவர் தோல் மருத்துவர் ஆவார்.

இவர் வீட்டின் அருகிலே மருத்துவமனை வைத்துள்ளார். விஷ்ணு தீபக் கடந்த 22ஆம் தேதி பெரம்பலூர் சென்றுவிட்டு நேற்று வீடு திரும்பிய நிலையில், கதவின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டிலிருந்த நகை மற்றும் பணம் திருடு போயிருந்தததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசாரிடம் புகார் தெரிவித்த நிலையில் மோப்பநாய், தடவியல் நிபுணர்கள் உதவியுடன் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை செய்ததில் நகைகளை திருடியது மருத்துவரின் உதவியாளர் வசந்த் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் என்பது தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Doctor home robbery in erode


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->