தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அந்தியூர்-பிரம்மதேசம் பிரிவில் உள்ள கடையில் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் தடை செய்யப்பட்ட ஆன்ஸ், குட்கா போன்ற புகையிலை பொருட்கள், அப்பகுதியை சேர்ந்த சத்தீஸ்வரன்(34) என்பவரின் கடையில் விற்பனைக்காக 714 பாக்கெட் போதை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து சத்தீஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த ரூ.9 ஆயிரம் மதிப்புள்ள 7 கிலோ எடையுள்ள 714 பாக்கெட் போதை பொருள்களை பறிமுதல் செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Drug seller arrested in erode


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->