துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு, மின்சாரம் இல்லாமல் தவித்த மதுரைவாசிகள் !! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று அதிகாலையில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், ஆயிரக்கணக்கான மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மதுரையில் கே.புதூர், ஆனையூர், ஊமச்சிகுளம், கடையநல்லூர், அழகர் கோயில் சாலை ஆகிய பகுதிகளுக்கு ஏற்பட்ட மின் தடையால் அங்குள்ள மக்கள்  பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இதைப்பற்றி TANGEDCO அதிகாரிகள் கூறுகையில்," திருப்பலை துணை நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இருட்டடிப்பு ஏற்பட்டது, ஆனால் பிரச்சினை உடனடியாக சரி செய்யப்பட்டது", என்று கூறினார்.

இதை பற்றி உள்ளூர்வாசி ஒருவர் கூறுகையில், "அழகர் கோயில் சாலையில் ஞாயிற்றுக்கிழமை காலை, 2 மணிக்குப் பிறகு ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் குறைந்தது 30 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைபட்டதாகக் கூறினார். "அதிகாலையில் இது ஐந்து முறை நடந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அதிகாலை 3 மணியளவில் எனது ஏசி மற்றும் குளிர்சாதன பெட்டியை அணைத்தேன். அழகர் கோயில் சாலை, மூன்றுமாவடி, கே.புதூர் போன்ற இடங்களிலும் இதே நிலைதான் இருந்தது. ஆனால், நாங்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது. TANGEDCO அதிகாரிகள், யாரும் அழைப்புகளை எடுக்கவில்லை" என்று உள்ளூர்வாசி கூறினார்.

"திருப்பாலை 110KV துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட கடுமையான கோளாறுகள் காரணமாக இந்த இடையூறு ஏற்பட்டதாக டாங்கேட்கோவின் அதிகாரி ஒருவர் கூறினார். "மேலும் பிரச்சினையைத் தீர்க்க தொழிலாளர்கள் குழு அனுப்பப்பட்டது. பழுதுபார்க்கும் பணியின் போது, ​​சப்ளையை முறைப்படுத்த வேண்டியிருந்தது, எனவே மாற்று சப்ளை வழங்க பேக் பீடிங் முறையை தேர்வு செய்தோம். இதனால் வீடுகளில் மின் தடை ஏற்பட்டது. மேலும், கற்பக நகரில் உள்ள ஒரு டிரான்ஸ்பார்மரில் கடுமையான பழுதடைந்து, இதனால் இடையூறு அதிகரித்துள்ளது. ஆனால் தற்போது நகரத்தில் எங்கும் மின் தடை இல்லை," என்று அதிகாரி கூறினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Due to a technical fault in the substation residents were left without electricity


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->