சந்திரபாபு நாயுடு நிதிஷ்குமாரும் கில்லாடிகள்! எப்போது வேண்டுமானாலும் மோடியை பிரதமர் நாற்காலியில் இருந்து தள்ளி விடுவார்கள் - பெங்களூர் புகழேந்தி! - Seithipunal
Seithipunal


எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆக இருக்கும் போது அம்மா உணவகத்திற்காக எந்த நிதியும் ஒதுக்கவில்லை என பெங்களூரு புகழேந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

ஓசூரில் அதிமுக ஒருங்கிணைப்பு குழு நிர்வாகி பெங்களூர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, அம்மா உணவகத்தை மேம்படுத்துவதற்காக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ரூ. 21 கோடி நிதி ஒதுக்கி உள்ளதை மனப்பூர்வமாக பாராட்டுகிறேன்.

ஏழை எளிய மக்கள் பயன்படுத்தக்கூடிய அம்மா உணவகத்திற்கு மேலும் வளர்ச்சிக்காகவும் மேம்பாட்டுக்காகவும் நிதி ஒதுக்க வேண்டும். இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இந்த திட்டம் தோல்வியடைந்தது. ஆனால் தமிழகத்தில் மட்டும் மாபெரும் வெற்றி அடைந்துள்ளது.

தமிழகத்தை 4 ஆண்டுகாலம் காலம் ஆட்சி செய்த எடப்பாடி பழனிச்சாமி அம்மா உணவகத்திற்க்காக எந்த நிதியும் ஒதுக்காமல் ஏமாற்றி வந்தார். இப்பொது ஏன் அம்மா உணவகத்தை பற்றி கவலை படுகிறார். மத்தியில் பிரதமர் நாற்காலி ஆடிக்கொண்டுள்ளது.

சந்திரபாபு நாயுடு நிதிஷ்குமாரும் எப்போது வேண்டுமானாலும் பிரதமர் மோடி பிரதமர் நாற்காலியில் இருந்து தள்ளி விடுவார்கள். நாட்டில் எதிர்க்கட்சிகள் வலுப்பெற்றுள்ளன ஜனநாயகம் தழை தூங்கி உள்ளது என தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Edappadi Palaniswami did not allocate any funds for Amma Restaurant


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->