தங்கச்சிமடம் || சட்டவிரோதமாக இலங்கை செல்ல முயன்ற 8 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்து தங்கச்சிமடம் பேருந்து நிறுத்தத்தில் நேற்று இரவு சந்தேகப்படும் வகையில் நின்றுகொண்டிருந்த சிலரிடம், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விசாரணை நடத்தினர். அதில், இலங்கை தமிழர்கள் இருவரை சட்டவிரோதமாக படகில் இலங்கைக்கு அனுப்பிவைக்க திட்டமிட்டது தெரிய வந்தது.

மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில், இலங்கை வவுனியா பகுதியை சேர்ந்த இருவர் விமானம் மூலமாக கடந்த 2017 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்துள்ளனர். பின்னர் அவர்கள் அகதியாக பதிவு செய்ய முயன்றனர். ஆனால் விமானத்தில் வந்த காரணத்தால் அவர்களால் அகதியாக பதிவு செய்ய முடியவில்லை.

இதனால், அவர்கள் தங்கச்சிமடம் வழியாக இலங்கைக்கு சென்ற பிறகு, அங்கிருந்து அகதியாக திரும்பி வரலாம் என்று 6 பேரை கொண்டுள்ளனர். அதன்பின்னர் இன்று அதிகாலை 4 மணிக்கு படகு மூலம் இலங்கைக்கு தப்பி செல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. 
இதனையடுத்து போலீசார் எட்டு பேரை கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eight srilangan tamilans arrested in rameswaram thangachimadam


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->