நீலகிரி மாவட்டம்! மின்சாரம் பாய்ந்ததில் மின் பணியாளர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டத்தில் மின்சாரம் பாய்ந்ததில் மின் பணியாளர் ஒருவர் உயிரிழந்து உளளார்.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள உப்பட்டி துணை மின் நிலையத்தில் நேற்று மாலை பழுது ஏற்பட்டுள்ளது. இதைதொடர்ந்து மின்சப்ளை துண்டிக்கப்பட்டு பழுதை சீரமைக்கும் வேலையை மின் பணியாளர்கள் செய்து கொண்டிருந்தனர்.

அப்பொழுது திடீரென்று மின்சப்ளை கொடுக்கப்பட்ட நிலையில் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த மின் பணியாளர் ஆனந்தராஜ் மீது மின்சாரம் பாய்ந்ததில் உடல் முழுவதும் கருகி விபத்து ஏற்பட்டுள்ளது.

அங்கு உடன் பணியாற்றியவர்கள் ஆனந்தராஜை சிகிச்சைக்காக பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனந்தராஜின் நிலைமை மோசமாக இருப்பதால் பந்தலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடியாத நிலையில் மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டார். இந்நிலையில் ஆனந்தராஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Electrical worker killed in power outage


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->