ஈரோடு : கொலையை நேரில் பார்த்தவருக்கு கொலை மிரட்டல்!! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் இளைஞர் கொலை சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளுக்கு குற்றவாளியின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எஸ்.பி அலுவகத்தில் புகார் மனு .

ஈரோடு மாவட்டம் மலையும்பாளையத்தை சேந்தவர் கட்டுமான மேற்பார்வையாளாக பணிபுரிந்து வருபவர் ஹரிஷ். இவர் சமீபத்தில் கழுத்தில் குத்தி கொலை செய்யப்பட்டார். அதனை அடுத்து கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்தது காவல்துறை. பின்னர் கொலை குற்றவாளி நீதிமன்றத்தில் சரணடைந்த்தார். போலீஸ் மேலும் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது .

இந்தநிலையில், 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எஸ்.பி அலுவகத்திற்கு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் எஸ்பியை சந்தித்த கிராம மக்கள், ஹரிஷ் கொலையை நேரில் பார்த்த சாட்சிகளான கவுதம் ,அன்பரசன் ஆகியோரை கொலை குற்றவாளியின் உறவினர்களான  ரமேஷ்,செங்கோடன்,ராமலிங்கம்,ராஜேந்திரன்,சபரீஸ்வரி,சிவானந்தன்,அருள்மணி ஆகிய 9 பேர் சாட்சி அளிக்கக்கூடாது என கூறி கொலை மிரட்டல் விடுப்பதாக புகார் மனுவை எஸ்பியிடம் அளித்தனர்.

மேலும், உயிரிழந்த ஹரிஷ் குடும்பத்தையும் குற்றவாளியின் உறவினர்கள் மிரட்டுவதாக குற்றம் சாட்டினார்கள். கொலை மிரட்டல் விடுத்த 9பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் சாட்சிகளிக்க உள்ள இருவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode Death threat to the person who witnessed the murder


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->