ஆவடி : இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து.. முன்னாள் ராணுவ வீரர் பலி.!
Ex millitary man death in road accident
ஆவடி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் உயிரிழந்துள்ளார்.
சென்னை ஆவடியை அடுத்த மிட்டனமல்லி ராணுவ குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 51). இவர் ராணுவ வீரராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். தற்போது இவர் திருநின்றவூர் அருகே கொசவன்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் சீனிவாசன் நேற்று காலை வழக்கம் போல் வீட்டில் இருந்து வேலைக்கு தனுசு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது திருநின்றவூர் பெரியபாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது இவரது இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியது.
இதில் நிலை தடுமாறி சாலையில் கீழே விழுந்த சீனிவாசன் தலையில் லாரி சக்கரம் ஏறி இறங்கியது. இதில், அவர் அணிந்திருந்த ஹெல்மெட் உடன் தலையும் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Ex millitary man death in road accident