மது குடிப்பதை கைவிட முடியாததால் விவசாயி தற்கொலை - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் மது குடிப்பதை கைவிட முடியாததால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் காட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி செல்லமுத்து (50). இவர் கடந்த பல ஆண்டுகளாக அதிக அளவில் மது அருந்தி வந்துள்ளார்.

மேலும் இதனை கைவிட முடியாமல் புலம்பிவந்த செல்லமுத்து, மனவேதனையில் தற்கொலை செய்து கொள்வதற்காக பூச்சி மருந்தை குடித்துள்ளார்.

இதையடுத்து குடும்பத்தினர் செல்லமுத்துவை மீட்டு, சிகிச்சைக்காக கொடுவாய் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் செல்லமுத்து ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ஊதியூர் காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Farmer suicide in Tiruppur


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->