மத்திய அமைச்சருடன் செல்பி எடுத்து பதிவேற்றிய சசிதரூர்: கடுப்பில் காங்கிரஸ்..!
Shashi Tharoor took a selfie with a Union Minister Piyush Goyal
கேரளா, திருவனந்தபுரம் லோக்சபா தொகுதியில் இருந்து நான்கு முறை தொடர்ந்து எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டுள்ளவர் காங்கிரசை சேர்ந்த சசிதரூர். இவர் மன்மோகன் சிங் ஆட்சியில் மத்திய அமைச்சராக பதவி வகித்தவர். அத்துடன், ஐ.நா., சபையில் உயர் பதவி என, பன்முகம் கொண்டவர்.
இவர் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மேலிடத்தை கடுப்பாக்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இன்றும் அவ்வாறு கட்சியின் மேலிடத்தை இவர் கடுப்பாகியுள்ளார். சசி தரூர், இன்று (25.02.2025) மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுடன் செல்பி எடுத்து சமூகவலைதளங்களில் பதிவேற்றியுள்ளார். இதனை பார்த்த காங்கிரஸ் கட்சி கடுப்பாகியுள்ளது.

அத்துடன், சமீபத்தில் அமெரிக்காவில் பிரதமர் மோடி மற்றும் டெனால்டு டிரம்ப் சந்திப்பை பாராட்டி அறிக்கை வெளியிட்டிருந்தார். இடதுசாரி ஆட்சியில் கேரளா முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், முதல்வர் பினராயி விஜயன் பொருளாதாரத்தை சிறப்பாக கையாளுவதாகவும் புகழ்ந்து கூறியிருந்தார். இவ்வாறான இவரது செயல்கள் காங்கிரஸ் மேலிடத்தை மிகவும் கடுப்பாக்கியுள்ளது.
ஆனால், இதற்கெல்லாம் அவர் உரிய விளக்கத்தை அளித்து வந்தார். அத்துடன், காங்கிரசுக்கு நான் தேவை என்றால் கட்சியில் இருக்கிறேன். நான் உங்களுக்கு தேவை இல்லை என்றால் புத்தகங்கள், சொற்பொழிவுகள், உலகம் முழுதும் நிகழ்ச்சிகள் என எனக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன என்று வெளிப்படையாகி கூறியிருந்தார்.

இந்நிலையில், இன்று பிரிட்டன் வர்த்தக அமைச்சர் ஜோனாதன் ரெய்னால்டு, பா.ஜ., மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் ஆகியோருடன் செல்பி எடுத்து அதனை தனது ‛‛எக்ஸ் ''வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார். இவரது செயல் மீண்டும் சர்ச்சை ஏற்படுத்தியதால், சசிதரூர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து காங்கிரஸ் மேலிடம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
https://x.com/ShashiTharoor/status/1894225091149664308/photo/1
English Summary
Shashi Tharoor took a selfie with a Union Minister Piyush Goyal