தந்தை இறந்த அதிர்ச்சியில் மகனுக்கு ஏற்பட்ட விபரீதம்.. சோகத்தில் குடும்பத்தினர்.! - Seithipunal
Seithipunal


தந்தை இறந்த அதிர்ச்சியில் மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா நகர் பகுதியில் வடிவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நாராயணமூர்த்தி என்ற மகன் உள்ளார். இந்தநிலையில் வடிவேல் தனது உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார்.

இதனையடுத்து மகன் நாராயணமூர்த்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நாராயணமூர்த்திக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் அருகிலிருந்தவர்கள் நாராயணமூர்த்தி உடனடியாக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி நாராயணமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த திருவண்ணாமலை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Father death shock news hear son Heart attack


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->