இளைஞர்களே தயாரா இருங்க.. திருப்பூர் மாவட்டத்தில் (11.02.2023) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தபடாமல் இருந்தது. அதன் காரணமாக, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவித்து வந்தனர்.

இதனையடுத்து தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் 2 முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில், பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான ஊழியர்களை தேர்வு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் வரும் பிப்ரவரி 11ஆம் தேதி மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. அதன்படி, திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி நடைபெற உள்ளது.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். மேலும், இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு கல்வித்தகுதியாக 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை அனைவரும் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்பவர்கள் சுயவிவரங்கள் அடங்கிய குறிப்பு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச்சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் கலந்து கொண்டு பயன் பெறலாம். மேலும் இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள்  https://tirupurjobfair.in/ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

February 11 mega employment camp in thirupur district


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->