நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த தனியார் ஆம்னி பேருந்து - கோவையில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


தனியார் ஆம்னி பேருந்து ஒன்று 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு திருவண்ணாமலையில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில், இந்தப் பேருந்து கோவை மாவட்டம் பீளமேடு அருகே வந்துக் கொண்டிருந்த போது, திடீரென அதன் முன்பகுதி தீப்பிடித்து எரிய தொடங்கியது. 

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பேருந்து ஓட்டுநர் உடனடியாக பேருந்தை சாலையின் நடுவே நிறுத்திவிட்டு, பயணிகளை கீழே இயக்கியுள்ளார். இதனால், பெரும் அசம்பாவிதம் தடுத்து நிறுத்தப்பட்டது.ஆனால், சில நிமிடத்திலேயே பேருடந்த்து முழுவதும் தீ பிடித்து இருந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பீளமேடு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தீயை முழுமையாக அனைத்தனர். மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fire accident at private amni bus in coimbatore


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->