சாலையில் சென்று கொண்டிருந்த போது தீப்பிடித்த எரிந்த கார்..! - Seithipunal
Seithipunal


சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் காரங்காடு கிறிஸ்துவ திருச்சபை பாதிரியார் அருள்ஜீவா . இவர் சிவகங்கை மாவட்டம் அரியாண்டி புரம் தேவாலயத்திற்கு சென்று கொண்டிருந்தார்.  அப்போது அவர் சென்றுகொண்டிருந்த காரில் மின்கசிவு ஏற்பட்டது.

காரின் ஒட்டுநர் மற்றும் பாதிரியார் அருள்ஜீவா உடனடியாக காரை விட்டு இறங்கினர்.  அவர்கள் இறங்கியதும் காரில் மளமளவென தீப்பற்றியது. இதுகுறித்து தீயணைப்புதுறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், சில மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Fire Accident In Car Near Ramanathapuram


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->