விருதுநகர் || பாட்டாசு அலையில் வெடிவிபத்து - தொழிலாளர்களின் கதி என்ன? - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் அருகே செவல்பட்டியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆலையில், இன்று பயங்கர சத்தத்துடன் கூடிய வெடி விபத்து ஏற்பட்டது. உடனே அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் விரைந்து வெளியேறியுள்ளனர்.

பின்னர் இந்த வெடி விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்தத் தகவலின் பேரில் 2 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

ஆனால், ஆலைக்குள் பட்டாசுகள் தொடர்ந்து வெடித்து சிதறியதால் தீயை அணைக்கு பணியில் சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும் வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு தீயை அணைத்தனர்.

இந்த வெடிவிபத்தில் பட்டாசு ஆலையின் மூன்று அறைகள் முழுவதும் தரைமட்டமானது. இதையடுத்து போலீசார் பட்டாசு விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

fire accident in viruthunagar firecrackers factory


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->