நடுக்கடலில் விசைப்படகின் மீது மோதிய எண்ணெய் கப்பல் - மீனவர்களின் நிலை என்ன? - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு விசைப்படகில் ஒன்பது பேர் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் குளச்சல் பகுதியில் இருந்து இருபது மைல் தொலைவில் தெற்கு பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக சென்ற எண்ணெய் கப்பல் மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகு மீது மோதிவிட்டு அங்கிருந்து நீக்காமல் சென்றுள்ளது. இதில் விசைப்படகு சேதமடைந்தது. 

இந்த நிலையில் விசைப்படகு கொஞ்சம் கொஞ்சமாக கடலில் மூழ்க தொடங்கியது. அப்போது அந்த வழியாக வந்த சக மீனவர்கள் விசைப்படகில் இருந்த மீனவர்கள் ஒன்பது பேரை பத்திரமாக மீட்டனர். 

இதையடுத்து, அந்த விசைப்படகு முழுவதுமாக கடலில் மூழ்கியது. கப்பல் மோதியதில் சேதமடைந்த படகு கடலில் மூழ்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

fish boat drowned sea for oil boat collied


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->