பார்முலா 4 கார் பந்தயம்: காலவரையின்றி ஒத்திவைப்பு! - Seithipunal
Seithipunal



சென்னை, தீவுதிடல் மைதானத்தை சுற்றியுள்ள 3.5 கிலோமீட்டர் சுற்றளவு சாலைகளில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. 

இந்த கார் பந்தயம் வருகின்ற 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இந்த போட்டி தீவுதிடலில் இருந்து அண்ணா சாலை, சிவானந்த சாலை,  நேப்பியர் பாலம் வழியாக மீண்டும் தீவுதிடல் வந்து சேரும் வகையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு தமிழக அரசு ரூ. 40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து கார் பந்தயத்திற்காக சர்வதேச தரத்தில் சாலை அமைக்கும் பணிகள் முழு மூச்சில் நடைபெற்றது. 

இந்நிலையில் மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வெள்ளம் சூழ்ந்துள்ளதால் கார் போட்டி வருகின்ற 15-ம் தேதி மற்றும் 16ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து கார் போட்டி மீண்டும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஃபார்முலா 4 கார் பந்தயம் தீவு திடலில் நடத்துவதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

formula 4 race postponed indefinitely


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->