திருத்தணி முருகன் கோவில் - பிரசாதம் தயாரிக்கும் கூடத்தில் கியாஸ் கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோவிலுக்கு பல்வேறு ஊர்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதனால், கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு புளியோதரை, பொங்கல் மற்றும் சர்க்கரை பொங்கல் உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்படுகின்றன. 

இதற்காக மலைக்கோவிலில் பிரசாதம் தயாரிக்கும் கூடம் ஒன்று தனியாக உள்ளது. இந்தக் கூடத்தில், சுமார் பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். 

இந்த நிலையில், இந்த கூடத்தில் ஊழியர்கள் இன்று காலை வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கிருந்த சிலிண்டரில் திடீரென கியாஸ் கசிவு ஏற்பட்டுள்ளது. 

இதை கவனித்த ஊழியர்கள் அனைவரும் உடனடியாக சமையல் கூடத்தில் இருந்து வெளியேறிவிட்டனர். அதன் பின்னர் அவர்கள் சம்பவம் தொடர்பாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர்.

அந்த தகவலின் படி, தீயணைப்பு வீரர்கள் கோவிலுக்கு விரைந்து சென்று கியாஸ் கசிவை நிறுத்தினர். இந்த சம்பவத்தால் திருத்தணி கோவிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

gas leakage in thiruthani murugan temple


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->